தற்போதைய செய்திகள்

சென்னையில் கோடிக்கணக்கில் வசூலான சொத்து வரி..ஊக்கத் தொகை கொடுத்து வசூலை அள்ளிய மாநகராட்சி!

தந்தி டிவி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் சொத்து உரிமையாளர்கள் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரியை செலுத்த வேண்டும். திருத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்களிடம் இருந்து 372 புள்ளி 74 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை ஏப்ரல் 30-க்குள் செலுத்தியதால், 5 சதவீத ஊக்கத்தொகையாக அவர்களுக்கு 8 புள்ளி 57 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்