தற்போதைய செய்திகள்

"பசு வதை தடுக்கப்பட்டால் பூமியின் பிரச்சினைகள் தீரும்" - குஜராத் நீதிபதிகளின் சர்ச்சை கருத்து

தந்தி டிவி

பசு வதை தடுக்கப்பட்டால் உலகில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என குஜராத்தில் உள்ள தபி மாவட்ட நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

பசுக்கள் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், குற்றவாளிக்கு தபி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில், பசுக்கள் வெறும் விலங்குகள் கிடையாது என்றும், தாய்க்கு சமமானவை என்றும் தபி மாவட்ட நீதிமன்றம் கூறி உள்ளது.

மாட்டு சாணத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் கதிர்வீச்சை தடுக்கக் கூடும் என்றும், பசுவின் கோமியம் பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது என்றும் தீர்ப்பில் குஜராத் நீதிமன்றம் கூறி உள்ளது.

நோய்களைக் கோமியம் குணப்படுத்தும் என அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபணம் ஆகாத நிலையில், குஜராத் நீதிமன்றம் இவ்வாறு கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு