தற்போதைய செய்திகள்

திகார் சிறையில் கைதி கொலை.. 6 தமிழக காவலர்கள் சஸ்பெண்ட்டான விவகாரம் - விசாரிக்க DGP உத்தரவு

தந்தி டிவி

டெல்லி, திகார் சிறையில் திடீரென இரு தரப்பு கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், யோகேஷ் மற்றும் தீபக் ஆகிய இருவர், தில்லு தாஜ்பூரியா என்ற கைதியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலை சிறைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த தமிழக சிறப்பு காவல் படையினர் தடுக்கவில்லை என கூறி 6 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு கமாண்டோ படையின் ஏடிஜிபி ஜெயராமனை டெல்லி திகார் சிறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி வைத்தார். இதில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 6 தமிழக காவலர்களிடமும், சிறை காவலர்களிடமும் சம்பவத்தன்று நடந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை