தற்போதைய செய்திகள்

பிரதமரான ரிஷி சுனக் - 1947ல் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆனந்த் மஹிந்த்ரா

தந்தி டிவி

ரிஷி சுனக் பிரட்டன் பிரதமரானது பற்றி, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மகிந்திரா செய்துள்ள டிவீட்டில், வின்ஸ்டன் சர்ச்சிலின் ஆருடம் பொய்த்துப் போனதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரட்டனின் மிக முக்கிய பிரதமராக கருதப்படும் வின்ஸ்டன் சர்ச்சில், பிரதமராக இருந்த போது, இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதை எதிர்த்தார். இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் தரமும், திறமையும் அற்றவர்கள் என்றும், இந்தியாவை அழிவுக்கு கொண்டு செல்வார்கள் என்று 1947இல் கூறியிருந்தார். ஆனால் இன்று பிரட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியினர் பிரதமராகியுள்ளது, சர்ச்சிலின் கூற்றை பொய்பிக்கச் செய்துள்ளதாக, ஆனந்த் மகிந்திரா டிவிட்டர் மூலம் கூறியுள்ளார். இது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"