தற்போதைய செய்திகள்

அஜித் பவாருடன் பிரதமர் மோடி... மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பரபரப்பு

தந்தி டிவி

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. 39 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் இருந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வர் அஜித் பவர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரஃபுல் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தின் இடையே அஜித் பவார் மற்றும் பிரஃபுல் பட்டேல் இருவரையும் பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இருவரும் சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் இருவரிடமும் பிரதமர் மற்றம் அமித் ஷா ஆகியோர் தனியே ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் அஜித் பவாரை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசி இருப்பது உற்று நோக்கப்படுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்