தற்போதைய செய்திகள்

"தீட்சிதர்கள் பொதுமக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்"கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பூஜை வழிபாடு செய்ய முடியவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமஞ்சன உற்சவம் நடைபெறும் சமயத்தில் பூஜை மற்றும் வழிபாடுகளை மேற்கொள்ள கோயில் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கோயிலுக்குள் அதிக அளவு போலீசாரை குவித்துள்ளதாகவும் இதனால் பூஜை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சிவராமன் தெரிவித்துள்ளார். திருமஞ்சன உற்சவத்திற்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்ட பின் தங்களை அச்சுறுத்தும் வகையில் கோயில் வளாகத்திற்குள் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி