தற்போதைய செய்திகள்

கோழி கடைக்காரர் கொலை வழக்கு - வெவ்வேறு சமுதாயம் என்பதால்... நெல்லை அருகே நிலவும் பதற்றம்

தந்தி டிவி

ஆறுமுகம் என்பவரை நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. தொடர்ந்து, முக்கூடல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில், ஆறுமுகம் உயிரிழந்தார். பின்னர், பிரேத ப‌ரிசோதனை‌க்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவருடைய உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அரியநாயகிபுரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி, மணிகண்ட செல்வம், தருவையைச் சேர்ந்த ராம், தென்திருப்புவனத்தை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, மது போதையில் ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முக்கூடல் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு