தற்போதைய செய்திகள்

வனப்பகுதியில் நடந்தே சென்று சேவை செய்யும் போஸ்ட்மேன் - தக் சேவா விருது கொடுத்து கவுரவம்

தந்தி டிவி

தபால் அலுவலருக்கு தக் சேவா விருது

அம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் தபால் சேவை செய்து வரும் தபால் அலுவலருக்கு தக் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் இஞ்சிக்குழி என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் 110 வயதுடைய குட்டியம்மாள் என்பவருக்கு கடந்த 1 ஆண்டாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை வழங்குவதற்காக, கிறிஸ்து ராஜ என்ற தபால் அலுவலர், அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று உதவித்தொகை வழங்கி வருகிறார். இவரது பணியை பாராட்டும் விதமாக கடந்த 10-ஆம் தேதி, தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இவருக்கு உயரிய விருதான தக் சேவா விருது வழங்கப்பட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு