வீடியோக்களில் அநாகரீகமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஈரானிய யூடியூபர் மற்றும் பெண் டிக் டாக் பிரபலத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவோரைக் கண்காணிப்பதற்காகவே ஈரானிய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது... அதன்படி, அநாகரீகமாக பதிவிட்டு வந்ததாகக் கூறி யூடியூபர் ஹசன் சஜாமாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், பெண் டிக்டாக் பிரபலம் ஓம் ஃபஹத்திற்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து ஈரான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.