பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கட்டண சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவில், டிக்கெட்டுகள் முற்றிலும் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்லவிருக்கும் பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களுக்கு 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் டிக்கெடுகள் முற்றிலும் விற்று தீர்ந்ததால் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம் அடைந்தனர்.