தற்போதைய செய்திகள்

3 வயது சிறுவனை நடுரோட்டில் பிச்சை எடுக்கவிட்ட அம்மா அரவணைத்து தாயாக மாறிய போலீசார்

தந்தி டிவி

புதுச்சேரியில் கோயில் வாசலில் யாசகம் எடுத்துக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை, அப்பகுதியைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு, காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

புதுச்சேரி, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஹரி, கலைவாணன் ஆகிய இருவரும் ரோந்து சென்றபோது, பச்சை வாழியம்மன் கோயில் அருகே 3 வயது சிறுவன், யாசகம் எடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அவனிடம் விசாரித்தனர்.

அப்போது, அந்த சிறுவன், சாலைகளில் காகிதம் சேகரித்து விற்பனை செய்யும் ராணி என்பவரின் மகன் என்பது தெரியவந்தது.

கடந்த ஆண்டு கணவர் இறந்துவிட்ட நிலையில், சிறுவனை ராணி சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த சிறுவனை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்த காவலர்கள், அவனை அரியாங்குப்பத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை