தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தி வீட்டில் போலீசார் திடீர் விசாரணை - பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் பேசிய விவகாரம்

தந்தி டிவி

ராகுல் காந்தி வீட்டில் போலீசார் திடீர் விசாரணை.. "பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்கள் யார்?" - பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் பேசிய விவகாரம்

டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டில் டெல்லி போலீசார் திடீர் விசாரணை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி, ஸ்ரீநகரில் பாரத் ஜடோ யாத்திரையில் பேசிய விவகாரம் ஒன்று தற்போது பூதாகரமாகியுள்ளது. அன்று தம்மிடம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்கள், தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து பகிர்ந்ததாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களின் விவரம் கேட்டு டெல்லி போலீசார் ராகுல் காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதற்கு ராகுல் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால் தற்போது போலீசார், நேரடியாக டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு