தற்போதைய செய்திகள்

போலீசார் அடித்ததால் இளைஞர் விபரீத முடிவு - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

தந்தி டிவி

திருவாரூரில், விசாரணைக்கு வந்தபோது போலீசார் அடித்ததால், மனம் உடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிராமத்தை சேர்ந்த ராகுல்ராஜ் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணைக்கு வந்த ராகுல்ராஜை, போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ராகுல்ராஜ், வீட்டுக்கு வந்த நிலையில், விஷம் குடித்துள்ளார்.

இதனை அறிந்த உறவினர்கள், மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு