தற்போதைய செய்திகள்

வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்... 3 பேரை கைது செய்த போலீசார்

தந்தி டிவி

விருகாம்பாக்கம் அருகே சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் விடுதியை கண்காணித்து வந்த விருகம்பாக்கம் போலீசாரிடம், வெஸ்லி, மணிகண்டன் மற்றும் காட்சன் ஆகிய 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்