தற்போதைய செய்திகள்

'Boy Bestie' உடன் காதலி அனுப்பிய புகைப்படம்..கோவத்தில் இளைஞர் செய்த செயல்..சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை அடுத்த பெருங்குடி, திருவள்ளுவர் நகர் 5 வது தெருவில் வசித்து வருபவர் அனிதா. இவரது இளைய மகள் கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை தாய் அனிதா கண்டித்துள்ளார். இந்நிலையில், அனிதாவின் வீடு வெள்ளிக்கிழமையன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் ஆடைகள், பாத்திரங்கள், உணவு பொருட்கள், அரசு அடையாள அட்டைகள், கட்டில், பீரோ கருகின. வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வது தெருவில் வசித்து வந்த சத்திய மூர்த்தி என்பவரின் ஓட்டு வீட்டிற்குள் விழுந்தது. சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் செந்தில் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அனிதாவின் இளைய மகள் வேறு ஒரு இளைஞருடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்பியதால் ஆத்திரத்தில் காதலன் சூர்யா, வீட்டின் மீது பெட்ரோல் வீசி தீ வைத்தது தெரிய வந்தது. உடனடியாக சூர்யாவை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி