தற்போதைய செய்திகள்

பிரதமர் அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பிய பி.எச்.டி., மாணவன்.. விரைந்து வந்த சி.பி.ஐ. - தஞ்சையில் பரபரப்பு

தந்தி டிவி
• பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில் அனுப்பியதாக தஞ்சை அருகே பூண்டியை சேர்ந்த பி.எச்.டி., மாணவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். • தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. • இவர் ஒரு கல்லூரியில் பி.எச்.டி. படித்து வருகிறார். • இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. • இதையடுத்து டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தஞ்சை வந்தனர். • பூண்டியில் உள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டிற்கு சென்ற அவர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். • பின்னர் அவரை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிலையத்துக்கு அழைத்துச்சென்றும் விசாரித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை