தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• காரைக்குடி அருகே அரசு மதுபானக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், படுகாயமடைந்த கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் அரசு டாஸ்மாக் ஒன்று செயல்பட்டு வருகிறது. • அங்கு கடந்த 3 ஆம் தேதி இரவு, கடையின் விற்பனை கணக்குகளை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. • அப்போது, கடைக்கு வந்த பள்ளத்தூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடையினுள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இதில், கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 76 ஆயிரம் ரூபாய் பணம் தீயில் கருகி சேதமான நிலையில், கடை விற்பனையாளர் அர்ச்சுனன் 70 சதவீதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். • இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அர்ச்சுனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. • இதனிடையே, இந்த விபத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ராஜேஷும் காயமடைந்த நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை