தற்போதைய செய்திகள்

கை விரல்கள் அறுக்கப்பட்ட நிலையில் பெருமாள் சிலை... அதிர்ச்சியடைந்த பொது மக்கள்..!

தந்தி டிவி

திண்டிவனம் அருகே கோயிலில் உள்ள பஞ்சலோக பெருமாள் சிலையின் 2 கைவிரல்களை காணவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டிவனத்தை அடுத்த சாரம் கிராமத்தில் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது.

பராமரிக்கப்படாத நிலையில் இருந்து வந்த அக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய ஊர் பிரமுகர்கள் முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் சாரம் பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவர் கோயிலின் சாவியை பெற்று பராமரிப்பு பணிகளை செய்து வந்ததாகவும், இதற்கு ஊர் பொது மக்கள் எதிர்ப்பு

தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோயிலில் உள்ள பஞ்சலோக பெருமாள் சிலையின் வலது கையில் உள்ள கட்டை விரலும், இடது கையில் ஆட்காட்டி விரலும் அறுக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளதாகவும் இதற்கு தனசேகர்தான் காரணம் என்றும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்