நாகை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, செருதூர், பறவை, புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. கிறிஸ்துமஸ் விழாவுக்கான கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் மழை பெய்ததால், வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்திற்கு திருப்பலிக்காக வந்திருந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.