தற்போதைய செய்திகள்

தடையை மீறி கட்சிக் கொடி ஏற்றம்..தடுக்க முயன்ற அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு- கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தடையை மீறி கட்சியின் கொடியை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்றிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வாசுதேவனூர் கிராமத்தில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கட்சிக் கொடிக் கம்பத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டு வைத்தனர். அதற்கு வருவாய்த் துறையினர் தடை விதித்து, அகற்ற முயன்றபோது, அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசிக நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மாலையில் அந்த வழியாக வந்த திருமாவளவன், கட்சிக் கொடியை ஏற்றி விட்டுச் சென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்