தற்போதைய செய்திகள்

டியூஷனுக்கு சென்ற மகளை தேடிய பெற்றோர்.. பவானி ஆற்றில் சடலமாக கிடந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாயமான பள்ளி மாணவி, பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தாசம்பாளையம் பகுதி அருகே வசித்து வருபவர் காதர். இவரது 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி டியூஷனுக்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மாணவி, நேற்று மாலை பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு