தற்போதைய செய்திகள்

உயிரை மாய்த்த 7 மாத கர்ப்பிணி உடலை கணவர் வீட்டு வாசலில் புதைத்த பெற்றோர் - புதுக்கோட்டையில் உச்சகட்ட பதற்றம்

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கணவரின் வீட்டின் முன்பு பெண்ணின் உடலை புதைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீரனூர் அடுத்த துவரவயல் அருகே மேட்டுக்களம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும் சவேரியார் பட்டினத்தை சேர்ந்த நாகேஸ்வரி என்பவருக்குமிடையே திருமணம் நடைபெற்ற நிலையில், நாகேஸ்வரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதில், நாகேஸ்வரியிடம் அவரது மாமியார் மற்றும் மாமனார் வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படும் நிலையில், நாகேஸ்வரி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, நாகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிய நிலையில், பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாகேஸ்வரியின் உடலை அவரது கணவர் வீட்டின் முன்பு புதைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி