தற்போதைய செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய பரங்கிமலை படுகொலை... மாணவனின் தாயும் உயிரிழப்பு - ஒரு குடும்பமே பலியான சோகம்

தந்தி டிவி
• சென்னையில் கடந்த அக்டோபர் மாதம், ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தாயார், உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • சென்னை ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த ராமலட்சுமி என்பவரின் மகள் சத்தியப்பிரியா கல்லூரியில் படித்து வந்தார். • இந்த நிலையில், ஆலந்தூர் பகுதியை சேர்ந்த, ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தயாளன் என்பவரது மகன் சதீஷ், சத்தியப்பிரியாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சத்யா கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காத்திருந்த போது, அங்கு வந்த சதீஷ், சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார். • இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யாவின் தந்தை மாணிக்கம், அன்றைய தினமே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். • ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சத்யாவின் தாய் ராமலட்சுமி, தற்போது உடல் நலக்குறைவினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். • காதல் விவகாரத்தில் குடும்பமே உயிரிழந்த சம்பவம், ஆலந்தூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ