தற்போதைய செய்திகள்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு... 250 நாளாக தொடரும் போராட்டம்!- "முதல்வருக்கு முக்கிய கோரிக்கை..."

தந்தி டிவி
• காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் 250-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. • பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 250-வது நாளான ஞாயிறன்றும் போராட்டமும் கண்டன பொதுக் கூட்டமும் நடைபெற்றது. • அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்று, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். • அதானிக்காக விமான நிலையத்துக்கு நிலம் கையப்படுத்தப்படுகிறது என்று வன்னியரசு குற்றம்சாட்டினார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்