தற்போதைய செய்திகள்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு... 250 நாளாக தொடரும் போராட்டம்!- "முதல்வருக்கு முக்கிய கோரிக்கை..."

தந்தி டிவி
• காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் 250-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. • பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 250-வது நாளான ஞாயிறன்றும் போராட்டமும் கண்டன பொதுக் கூட்டமும் நடைபெற்றது. • அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்று, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். • அதானிக்காக விமான நிலையத்துக்கு நிலம் கையப்படுத்தப்படுகிறது என்று வன்னியரசு குற்றம்சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை