தற்போதைய செய்திகள்

அதிமுக சட்டமன்ற குழு விவகாரம் : ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பிடம் விளக்கம் கேட்க முடிவு

தந்தி டிவி

அதிமுக சட்டமன்ற குழு விவகாரம் தொடர்பாக, ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பின் விளக்கம் கேட்ட பிறகு, சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேர் நீக்கம் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பு சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றக் கூடாது எனவும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலவையில் இருப்பதால் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தரப்பிடம் விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு செய்துள்ளார். இரு தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகு சபாநாயகர் இறுதி முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்