தற்போதைய செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முதல்நாளே பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்தநிலையில் நாளைய தினமே மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகங்கள், இலவச சீருடை ஆகியவை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சீருடை அணிந்து வரும் பள்ளி மாணவர்கள், பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்