தற்போதைய செய்திகள்

அணுமின் நிலையத்தில் வட இந்தியர்கள் மட்டுமே.. "உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டும்" - கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

தந்தி டிவி

அணுமின் நிலையத்தில் வட இந்தியர்கள் மட்டுமே.. "உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டும்" - கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வட மாநிலத்தவருக்கே பணி வழங்கப்படுவதாக புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அரசு பள்ளிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. இதனை கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் எஸ்.பி.செல்கே திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடந்த ஆண்டில் வட இந்தியாவை சேர்ந்த இந்தி தெரிந்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் வரும் காலங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ