தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பரங்குன்றம், செய்யூர் பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவர் வடமாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவருடன், சென்னை, ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் நுழைவாயிலில் விளம்பர பலகை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில், விளம்பர பலகையை அளப்பதற்காக சுவர் மீது ரவிக்குமார் ஏறியபோது, கையில் வைத்திருந்த இன்ச் டேப் அருகில் இருந்த டிரான்ஸ்பார்ம் மீது உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவிக்குமார் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், இன்ச் டேப்பின் மறுமுனையை பிடித்திருந்த காஜா மொய்தீன் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தலையில் காயமடைந்த வடமாநில தொழிலாளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை