தற்போதைய செய்திகள்

"ரயில்வே ஸ்டேஷனில் தமிழ் தெரியாத அலுவலர்" - டிக்கெட் கொடுப்பதற்குள் கிளம்பிய ட்ரெயின்

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில், தமிழ் தெரிந்த அலுவலர் விடுப்பு எடுத்துள்ள நிலையில், தமிழ் தெரியாத அலுவலர் டிக்கெட் கொடுக்கும் பணிக்கு தாமதமாக வந்தார். அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அங்கு காத்திருந்த 300-க்கும் மேற்பட்டோர், ரயில்வே போலீசில் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அனைத்து பயணிகளும் டிக்கெட் எடுக்காமல் நெல்லைக்கு ரயில் ஏறி சென்றுள்ளனர். பயணிகள் மற்றும் பக்தர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ