தற்போதைய செய்திகள்

அறநிலையத் துறை இடத்தில் உள்ள வீடுகளுக்கு சீல் வைத்து கைது செய்த அதிகாரிகள்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.பெரியபாளையத்தை அடுத்த மதுரவாசல் கிராமத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை 9 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்களை வீடுகளை காலி செய்யுமாறு கடந்த 2017-ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 5 ஆண்டுகளாகியும் வீடுகளை காலி செய்ய மறுத்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 9 வீடுகளுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்