தற்போதைய செய்திகள்

பல உயிர்களை காவு வாங்கிய ஒடிசா கோர விபத்து - மக்கள் மொட்டையடித்துக் பிரார்த்தனை

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகாவில், கடந்த 2ம் தேதி நேர்ந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர விபத்து நடந்து 10-வது நாளை முன்னிட்டு, பஹானாகா கிராமத்தை சேர்ந்தவர்கள் நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். உயிரிழந்தவர்களின் நினைவாக 10வது நாள் சடங்குகள் நடைபெற்றன. பஹானாகா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் மொட்டையடித்துக்கொண்டு பிரார்த்தனை செய்தனர். காயமடைந்த பயணிகள் விரைவில் குணமடைய வேண்டினர். நாளை மற்றும் நாளை மறுநாளும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்