தற்போதைய செய்திகள்

தூங்கும் போது பாம்பு கடித்து செவிலியர் துடிதுடித்து பலி - திருவள்ளூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

பொன்னேரி அருகே வீட்டில் தூங்கியபோது பாம்பு கடித்து செவிலியர் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு பகுதியை சேர்ந்தவர் செவிலியர் பார்கவி. இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் பார்கவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி