தற்போதைய செய்திகள்

தனியார் ஜவுளி நிறுவனத்தில் தீக்குளித்த வடமாநில தொழிலாளி - கரூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கரூர் அருகே, வடமாநில தொழிலாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அரவக்குறிச்சி அடுத்த புத்தம்பூரில் செயல்படும் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில், சத்தீஸ்கரை சேர்ந்த தொழிலாளி அசோக் தாஸ் மகந்த் என்பவர், கடந்த ஆண்டு ஜூலை முதல், ஹெல்பராக, விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற அவர், பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அசோக் தாஸின் மனைவி அனிதா, மகள் முஸ்கன் சூர்யா ஆகியோர், அதே நிறுவனத்தில் பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ