தற்போதைய செய்திகள்

கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

தந்தி டிவி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை கல்குவாரியில் கிரஸர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் ஜல்லி உடைக்கும் கிரசரில் தங்கி பணியாற்றி வருகிறார் அசாம் மாநிலத்தை சேர்ந்த காதேஸ்வர்போரோ. இவர் கிரஸர் இயந்திரத்தை துடைக்கும் எதிர்பாராத விதமாக பெல்டில் சிக்கிய இடது கையை இழுக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உறவினர் அளித்த புகாரில் சூப்பரவைசர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்