தற்போதைய செய்திகள்

துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்ட நபர்..மனைவி சென்றதால் விபரீத முடிவு -நீலகிரியில் நடந்த கோர சம்பவம்

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். • தேவர் சோலை பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கு சாரதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. • இதனால் விரக்தி அடைந்த கண்ணதாசன், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கண்ணதாசனின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கி எதற்காக வைத்திருந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்