தற்போதைய செய்திகள்

துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்ட நபர்..மனைவி சென்றதால் விபரீத முடிவு -நீலகிரியில் நடந்த கோர சம்பவம்

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். • தேவர் சோலை பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கு சாரதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. • இதனால் விரக்தி அடைந்த கண்ணதாசன், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கண்ணதாசனின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கி எதற்காக வைத்திருந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை