தற்போதைய செய்திகள்

துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்ட நபர்..மனைவி சென்றதால் விபரீத முடிவு -நீலகிரியில் நடந்த கோர சம்பவம்

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். • தேவர் சோலை பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கு சாரதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. • இதனால் விரக்தி அடைந்த கண்ணதாசன், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கண்ணதாசனின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கி எதற்காக வைத்திருந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்