தற்போதைய செய்திகள்

பழங்குடியின மக்களுக்கு புது வீடுகள் - அதிரடி ஆய்வில் அமைச்சர்கள்

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் இருளர் பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தாமோ அன்பரசன், கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மலையன்குளம் பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளை, அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், தாமோ. அன்பரசன் ஆய்வு செய்தனர். கட்டுமான பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்த இருவரும், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு