தற்போதைய செய்திகள்

பழங்குடியின மக்களுக்கு புது வீடுகள் - அதிரடி ஆய்வில் அமைச்சர்கள்

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் இருளர் பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தாமோ அன்பரசன், கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மலையன்குளம் பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளை, அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், தாமோ. அன்பரசன் ஆய்வு செய்தனர். கட்டுமான பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்த இருவரும், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை