தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்று பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், நீதி விசாரணை நடத்த சார் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. • அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்களில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பல்லை பிடுங்கி காவல் அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. • இதுதொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் புகார்கள் வந்தன. • இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் தலைமையில் குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். • இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி