தற்போதைய செய்திகள்

டயாலிசிஸ்-க்காக அழைத்து சென்ற மருத்துவர்கள்.. திடீரென உயிரிழந்த பள்ளி ஆசிரியை - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

தந்தி டிவி
• நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை திடீரென உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பானது. • தூத்துக்குடியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை பத்மபிரியா. • இவர் சீறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். • அங்கு, தொடர்ந்து 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பத்மபிரியாவை, டயாலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அழைத்து சென்றுள்ளனர். • அப்போது, திடீரென உடல் உபாதை ஏற்பட்டு ஆசிரியை உயிரிழந்ததாக கூறபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்த சம்பவத்தில், மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி ஆசிரியையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பானது. • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆசிரியையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்