தற்போதைய செய்திகள்

பள்ளி வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த பள்ளி காவலாளி.. வெளியான பகீர் தகவல் - நாமக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி
• நாமக்கல் மாவட்டம், ஆர்.எஸ். பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் நடராஜ். • இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி வளாக பகுதியில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். • அவரது சடலத்தை உடற்கூராய்வு செய்ததில், அவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. • போலீஸ் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரபு ராம், மணிகண்டன், மாணிக்கம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். • இதில், பள்ளி வளாகத்தில் மூவரும் இணைந்து மது அருந்தியதை கண்டித்ததால், காவலாளி நடராஜை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரிய வந்தது. • இதையடுத்து, மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்