தற்போதைய செய்திகள்

உறவினருடன் சொத்து தகராறு.. திமுக பிரமுகர் மகனுக்கு கத்தி குத்து! - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• நாகையில் முன்னாள் திமுக நகர செயலாளர் மகனை, அவரது உறவினர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. • நாகை, வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் பன்னீர். • இவருடைய மகன் தயாளன் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். • தயாளனுக்கும், அவரது உறவினரான சரவணனுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. • இந்நிலையில் தயாளன் வீட்டில் நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கையில் அங்கு தனது கூட்டாளியுடன் வந்த சரவணன் மீண்டும் சொத்து குறித்து தயாளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். • ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை கொண்டு தயாளனையும், அவருடைய நண்பரையும் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார். • இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சரவணன் மற்றும் அவருடைய கூட்டாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். • இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை