தற்போதைய செய்திகள்

வீட்டின் முன் நின்ற காரின் டயர்களை கழற்றி சென்ற மர்ம நபர்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், சொகுசு காரின் 4 டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சீர்காழி காந்தி பூங்கா எதிரில் வசிக்கும் முத்துராமன் என்பவர், சொகுசு கார் ஒன்றை வாங்கி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர். கார் டயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துராமன், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி