தற்போதைய செய்திகள்

வீட்டின் முன் நின்ற காரின் டயர்களை கழற்றி சென்ற மர்ம நபர்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், சொகுசு காரின் 4 டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சீர்காழி காந்தி பூங்கா எதிரில் வசிக்கும் முத்துராமன் என்பவர், சொகுசு கார் ஒன்றை வாங்கி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர். கார் டயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துராமன், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு