திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தங்கப்பாண்டி என்ற லாரி ஓட்டுநர், வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தங்கப்பாண்டியின் முகம் மற்றும் கையில் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி உயிரிழந்தார். இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.