தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவி மர்ம மரணம்.. சக மாணவர்களிடம் விசாரணை - சிபிசிஐடி தகவல்

தந்தி டிவி

கோவில்பட்டியை அடுத்த சில்லங்குளம் பள்ளி மாணவி சந்தேக மரணம் தொடர்பாக, மாணவியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த சிபிசைடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே சில்லாங்குளத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த வைத்தீஸ்வரி என்ற மாணவி கடந்த 20ஆம் தேதி கழிவறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், சக மாணவர்கள், ஊழியர்கள் என 45 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவியின் சொந்த ஊரான பரமக்குடியை அடுத்த எஸ். அண்டக்குடிக்கு சென்று, குடும்பத்தினர், உறவினர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?