தற்போதைய செய்திகள்

"என் மகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வந்துள்ளதாக போன் வந்துச்சு.." மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி, ஜிபே மூலம் 18 ஆயிரம் ரூபாய் வரை மோசடி நடந்தது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவரை, செல்போன் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டார். உங்களது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகவும், அதனை பெற்றுத்தர வங்கிக்கணக்கில் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை இருப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பள்ளி மாணவிகள் 3 பேர், சக மாணவியின் செல்போனில் இருந்து ஜிபே மூலம் ஆன்லைனில் பணத்தை செலுத்தியுள்ளனர். பணம் செலுத்திய பின்னர், சம்பந்தப்பட்ட நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை துண்டித்துள்ளார். இதேபோல் மேலும் ஒரு மாணவி 8 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஆன்லைன் மோசடி குறித்து, பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை