தற்போதைய செய்திகள்

சாய்பாபாவிற்கு சந்தன காப்பு அலங்காரம் செய்த இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

ராமநவமி மற்றும் சந்தனக்கூடு விழா மத நல்லிணக்கத் திருவிழாவாக ஈரோடு கருங்கல்பாளையம் சீரடி சாய்பாபா கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது...

அங்கு அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயிலில் பல்லக்கு சேவை சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது... 54 கலசங்களில் சந்தனத்தை ஏந்தியபடி பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்... தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் குர் ஆன் ஓதி பாத்தியா அளித்தனர். அதன் பிறகு சாய்பாபாவிற்கு சந்தன காப்பு அலங்காரமும், சந்தன அபிஷேகமும் இஸ்லாமியர்களால் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் சாய்பாபா சிலைக்கு சந்தன அபிஷேகம் செய்தனர்.

நிகழ்வில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 3 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை