தற்போதைய செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்தவர் கொலை - மாவட்ட எஸ்.பி போட்ட உத்தரவு

தந்தி டிவி

ஓசூரில் ஸ்ரீராம் சேனா நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய, காவல் ஆய்வாளர் உட்பட இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

ஓசூர் அருகே உள்ள சொப்பட்டியில், ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிர்வாகி மோகன் பாபு என்பவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிர்வாகி திலக் உட்பட 7 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கொலை வழக்கில் கைதான திலக், சில தினங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்தார். இவரை, அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பழிக்கு பழி வாங்கும் நோக்கில், கொலை செய்யப்பட்ட மோகன்பாவின் தந்தை கூலிபடையை ஏவி திலக்கை கொலை செய்தது தெரியவந்தது.இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய மத்திகிரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சிற்றரசு ஆகிய இருவரை மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்