தற்போதைய செய்திகள்

"நில அளவீடு செய்யச் சென்ற பெண் வி.ஏ.ஓ".. "மும்பையிலிருந்து வந்த கொலை மிரட்டல்" - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நில அளவீடு செய்யச் சென்ற பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. • அரும்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் அலுவலகம் அமைக்க, புறம்போக்கு இடங்களை அளவீடு செய்ய, திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. • இதன் அடிப்படையில், அரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா மற்றும் நில அளவையர் ஏழுமலை ஆகியோர், நிலங்களை அளவீடு செய்தனர். • இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். • மேலும், ஜீவாவுக்கு மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. • விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், சக்கரையாஸ் ஷெட்டி என்பது தெரியவந்தது. • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | NDA | Vijay | விஜய்யால் உடைகிறதா NDA? - தவெகவை நோக்கி மிகப்பெரிய கட்சி?

Seeman | Vijay | சீமான் ரூட்டை பிடித்த விஜய்.. தமிழகத்தில் உறுதியானது

Rajini | Aadhav Arjuna | "ஆதவ் பேச்சு விஜய் தலையில் தான் விடியும்"-குண்டை தூக்கி போட்ட துக்ளக் ரமேஷ்

ஆதவ்வை இறங்கி அடித்த ரஜினி - அரசியல் பஞ்ச் அடித்து எச்சரிக்கை

NDA | Anbumani | PMK | "தயவுசெய்து தமிழக மக்களே" - அனல் பறக்க பேசிய அன்புமணி