தற்போதைய செய்திகள்

"என் அம்மாவுக்கு ஒரு துணையை கண்டுபிடித்து விட்டேன்"... தாய்க்கு தாயாகி மறுமணம் செய்து வைத்த மகள்!... ஆஹா கல்யாணம்..!

தந்தி டிவி

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வசித்து வரும் மௌசுமி என்ற பெண்ணின் கணவர், சக்ரவர்த்தி, 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதன்பிறகு, மெளசுமி மறுமணம் செய்து கொள்ளாமல் குழந்தையே உலகம் என வாழ்ந்துள்ளார். தந்தை இறந்தபோது இரண்டு வயது குழந்தையாக இருந்த அவரது மகள் தேபர்த்திக்கு தற்போது இருபத்தேழு வயது. மும்பையில் திறன் மேலாளராகப் பணியாற்றும் அவர், தற்போது, 50 வயதாகும் தனது தாயாருக்கு மேற்குவங்கத்தைச் சேர்ந்த திருமணமாகாத 50 வயது ஸ்வபன் என்பவரை மறுமணம் செய்து வைத்துள்ளார். நண்பர்கள் மூலமும், தானும் தொடர்ந்து மெள சுமியிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்