தற்போதைய செய்திகள்

"மாதிரி பள்ளிகள் தேர்வை ஏற்க முடியாது" - ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகளுக்கு நடைபெற்ற தேர்வு, சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது என்பதால், அதை ஏற்க முடியாது என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மயில், தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தி வருவதாகவும், அதனடிப்படையில் மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிவிட்டு, மறைமுகமாக ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்