தற்போதைய செய்திகள்

கோவையில் மாயமான 12 வயது சிறுமி - பரபரப்பை கிளப்பிய சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கோவையில் காணமல் போன 12 வயது சிறுமியை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சியில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சுதாகரன் - சசிகலா தம்பதியின் 12 வயது மகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திட, மறுபுறம் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படங்களை பதிவிட்டு குழந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சிறுமியை கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சிகளையும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்தநிலையில், காணாமல் போன சிறுமி ஸ்ரீநிதி பொள்ளாச்சி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்