தற்போதைய செய்திகள்

கோவையில் மாயமான 12 வயது சிறுமி - பரபரப்பை கிளப்பிய சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கோவையில் காணமல் போன 12 வயது சிறுமியை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சியில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சுதாகரன் - சசிகலா தம்பதியின் 12 வயது மகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திட, மறுபுறம் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படங்களை பதிவிட்டு குழந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சிறுமியை கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சிகளையும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்தநிலையில், காணாமல் போன சிறுமி ஸ்ரீநிதி பொள்ளாச்சி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"